விமான விபத்தில் பலியானவர்களுக்கு பா.ஜ.க வினர் அஞ்சலி !
அகமதாபாத் விமான விபத்தில் பலியானவர்களுக்கு கோவையில் பாஜகவினர் அஞ்சலி.;
குஜராத் மாநிலம் ஆமதபாத்தில் இருந்து லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், 825 அடி உயரத்தில் இருந்தபோது, மருத்துவ மாணவர் விடுதி மீது விழுந்து வெடித்ததில் 241 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 1 பயணி மட்டும் உயிர் தப்பினார். விடுதியில் இருந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என 33 பேரும் உயிரிழந்தனர். இந்த நிகழ்வை தொடர்ந்து, கோவை சிங்காநல்லூரில் பா.ஜ.க.வினர் அஞ்சலி நிகழ்ச்சி நடத்தினர். உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.