மகராஜகடை: யானைகளை காப்புக்காட்டின் வழியாக விரட்டும் பணிகள் ஆய்வு.
மகராஜகடை: யானைகளை காப்புக்காட்டின் வழியாக விரட்டும் பணிகள் ஆய்வு.;
கிருஷ்ணகிரி வட்டம், மகராஜகடை, காப்புக்காடு பகுதிக்குட்பட்ட பெரிய சாக்னாவூர் வனப்பகுதியில் நிரந்தரமாக தங்கியுள்ள யானைகளை காப்புக்காட்டின் வழியாக விரட்டும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட வன அலுவலர் திரு.பகான் ஜெகதீஷ் சுதாகர் இ.வ.ப., ஆகியோர் நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.