தொண்டான்துளசி அருகே மான் உயிரிழப்பு!

நாய்கள் கடித்ததால் மான் ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.;

Update: 2025-06-18 16:47 GMT
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா தொண்டான்துளசி பகுதியில், நாய்கள் கடித்ததால் மான் ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள், மானின் உடலை மீட்டனர். பின்னர், காளாம்பட்டு கால்நடை மருத்துவமனை மருத்துவரை வரவழைத்து பிரேத பரிசோதனை செய்தனர். இதைத்தொடர்ந்து, அருகில் உள்ள காப்பு காட்டில் இறந்த மானின் உடலை புதைத்தனர்.

Similar News