கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
சின்னாளப்பட்டியில் உபயோகப்படுத்துவதற்காக கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது;
திண்டுக்கல் சின்னாளப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது வேலாம்பட்டி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது அவர் வேலம்பட்டி பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் பிரபு(28) என்றும் அவர் உபயோகப்படுத்துவதற்காக கஞ்சா வைத்திருப்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் பிரபுவை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.