கல்லூரி மாணவி மாயம் . போலீஸ் விசாரணை

மதுரை பேரையூர் அருகே கல்லூரி மாணவி மாயம் என அவரது தந்தையை புகார் அளித்துள்ளார்.;

Update: 2025-06-23 12:12 GMT
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா கருணை ஆனந்தர் தெருவில் வசிக்கும் சேகரனின் மகள் தமிழரசி( 27) என்பவர் மீனாட்சி கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார். இவர் நேற்று காலை 10 மணிக்கு கம்யூட்டர் சென்டருக்கு சென்று வருவதாக சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் இவரது தந்தை நேற்று (ஜூன்.22) இரவு பேரையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம் பெண்ணை தேடி வருகிறார்கள்.

Similar News