சதுரங்க போட்டியில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவிகள்.
மதுரை நடைபெற்ற சதுரங்க போட்டியில் மேலூர் அரசு பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்;
மதுரையில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி புதூரில் உள்ள உள்ள ஜன்னா சிபிஎஸ்இ பப்ளிக் ஸ்கூலில் நேற்று (ஜூன் .22) நடைபெற்றது. இப்போட்டியில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 9வயது பிரிவு, 12 வயது பிரிவு, 15 வயது பிரிவு, ஆகிய பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன. இப்போட்டியில் 15 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் மதுரை, மேலூர் ஒன்றியம், அ.செட்டியார்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி இ.இஸ்பா டுஜானா முதலிடமும், அதே பள்ளிக்கு அருகில் உள்ள அ.வள்ளாளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி G.வேதாஸ்ரீ மூன்றாம் இடமும் பெற்றனர். 12வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் அ.செட்டியார்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி S.யாகஸ்ரீ நான்காம் இடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு அ.செட்டியார்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. மு.மணிமேகலை, அ.வல்லாளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. G.வினோத், இம்மாணவர்களுக்கு சதுரங்க பயிற்சி அளித்தவரும், அ.செட்டியார்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் இடைநிலை ஆசிரியருமான திரு.ஞா.செந்தில்குமார், அ.வல்லாளப்பட்டி சேர்மன் குமரன், கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டினர்.