பச்சபட்டியில் பட்டப் படிப்பு முடித்த இளம் பெண் மாயம். மகளைக் காணவில்லை தந்தை புகார்.

பச்சபட்டியில் பட்டப் படிப்பு முடித்த இளம் பெண் மாயம். மகளைக் காணவில்லை தந்தை புகார்.;

Update: 2025-06-30 13:02 GMT
பச்சபட்டியில் பட்டப் படிப்பு முடித்த இளம் பெண் மாயம். மகளைக் காணவில்லை தந்தை புகார். கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பச்சப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகள் விவேகா வயது 23. இவர் பி ஏ பி எட் வரை படித்துள்ளார். ஆயினும் இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் ஜூன் 28ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற விவேகா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த வேலுசாமி வழக்கமாக தனது மகள் செல்லும் இடங்களில் தேடிப் பார்த்தும்,உறவினர்கள் வீட்டில் விசாரித்துப் பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கப்பெறாததால் இது குறித்து வெள்ளியணை காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு மாயமான விவேகாவை தேடி வருகின்றனர் வெள்ளியணை காவல்துறையினர்.

Similar News