மக்களின் கோரிக்கையை ஏற்று ஓடை மண் அகற்றம்
திருநெல்வேலி மாநகராட்சி 23வது வார்டு;
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 23வது வார்டுக்கு உட்பட்ட தொட்டி பாலம் மெயின் ரோட்டில் ஓடை மண் நிறைந்து காணப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் அளித்தனர்.இந்த புகாரை தொடர்ந்து 23வது வார்டு கவுன்சிலர் அனார்கலி அப்துல் சுபஹானி ஏற்பாட்டில் இன்று (ஜூலை 2) ஓடை மண் அப்புறப்படுத்தும் பணி தூய்மை பணியாளர்கள் மூலம் நடைபெற்றது.