நரிக்குறவர்களுக்கு பாய்கள் தலையணைகள் வழங்கும் நிகழ்ச்சி
பேட்டை நரிக்குறவர் காலனி;
நெல்லை மாநகர பேட்டை நரிக்குறவர் காலனில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர் செல்வம் ஏற்பாட்டில் பாய்கள் தலையணைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஜூலை 2) நடைபெற்றது. இதில் மக்கள் நல நண்பர்கள் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் கலந்து கொண்டு நரிக்குறவர்களுக்கு பாய்கள் மற்றும் தலையணைகளை வழங்கினார். இதில் ஏராளமான நரிக்குறவர்கள் பயன் பெற்றனர்.