போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரக் கூட்டம்
மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியில் போதை தடுப்பு எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி போலீசாரால் நடத்தப்பட்டது.;
மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் உத்தரவின்படி, மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்கள், பொதுமக்கள் இடையே போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாநகரில் ANTI DRUG CLUB மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு,செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மதுரை தல்லாகுளம், மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் Anti Drug Club மன்றத்தின் போதைப்பொருள்கள் தடுப்பு தொடர்பான 203 வது விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (ஜூலை.7) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல்துறையினர், பேராசிரியர்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.