திருவாரூரில் காத்திருப்பு போராட்டம்
பொதுவிநியோகத்திட்டத்துக்கு தனித்துறை அமைக்கக் கோரி திருவாரூரில் நியாயவிலைக் கடை பணியாளா் காத்திருப்புப் போராட்டம்;
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நியாயவிலைக் கடை ை பணியாளர்கள் நடத்திய காத்திருப்புப் போராட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் எடையாளா்களை நியமிக்க வேண்டும், டிஎன்சிஎஸ்சி எடைத் தராசையும், ரேஷன் கடையில் உள்ள விற்பனை முனையுடன் இணைத்து சரியான எடையில் அத்தியாவசியப் பொருள்களை வழங்க வேண்டும், ரேஷன் கடைகளுக்கு சேதாரக் கழிவு வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மாவட்டத் தலைவா் ரா. குணசீலன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.