காவல் ஆணையர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம்.

மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது;

Update: 2025-07-09 12:27 GMT
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (ஜூலை.9) மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 43 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையர் அவர்களிடம் அளித்தனர். காவல் துணை ஆணையர் (தெற்கு), காவல் துணை ஆணையர் (வடக்கு), துணை ஆணையர் (தலைமையிடம்) ஆகியோர் உடன் இருந்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் ஆணையர் அவர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Similar News