குளிக்கச் சென்ற மாணவன் உயிரிழப்பு

மதுரை அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் பாறையில் முட்டியதில் உயிரிழந்தார்;

Update: 2025-07-10 03:58 GMT
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பாப்பனோடை கிராமத்தைச் சேர்ந்த அரசகுமார் மகன் விக்னேஷ்வரன் ( 13) இவரது தம்பி பீஷ்மர் (11) ,மற்றும் இவர்களது நண்பர் ஆகாஷ் ( 13) மூன்று பேரும் வீட்டின் அருகில் உள்ள பாறை கிணற்றில் நேற்று ( ஜூலை. 9)குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது டைவ் அடித்து குதித்த விக்னேஷ் பாறையில் சிக்கி தலையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து பீஷ்மர் மற்றும் ஆகாஷ் வீட்டில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தனர் அதனைத் தொடர்ந்து அனுப்பானடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 60 அடி ஆழமுள்ள கிணற்றிலிருந்து தண்ணீரை வெளியேற்றி மீட்பு பணிகளில் ஈடுபடுவது சற்று சிரமமாக இருந்தது. மேலும் மேலக்கால் பகுதியைச் சேர்ந்த மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.அதனை தொடர்ந்து இன்று (ஜூலை 10) இரண்டு மணி அளவில் சிறுவன் விக்னேஸ்வரன் மீக்கப்பட்டு உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Similar News