திருப்பரங்குன்றம் கும்பாபிஷேக பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்

மதுரை திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேக பணிகளை அமைச்சர் மூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்;

Update: 2025-07-10 07:31 GMT
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் வரும் திங்கட்கிழமை ஜூலை 14ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு கும்பாபிஷேகம் அன்று பொதுமக்கள் மீது புனித நீர் தெளிக்கப்படுவது குறித்து முன்னோட்டப் பணிகளை இன்று ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் காவல் ஆணையர் லோகநாதன் போக்குவரத்து காவல் துணை ஆணையர் வனிதா, மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், அறங்காவலர்கள், மற்றும் உயர் அதிகாரிகள் பலர் இருந்தனர்

Similar News