மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பாக 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்;
திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயந்தி தலைமை வகித்தார் ஒன்றிய அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 5000 உதவித்தொகை வழங்க வேண்டும் குடும்ப அட்டைகள் அனைத்தையும் ஏ ஏ ஒய் அட்டைகளாக மாற்றி வழங்க வேண்டும் 2013 தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தில் குடும்ப அட்டைகளை இணைத்து மாதம் உணவு தானியம் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2020 ஆம் ஆண்டு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டு உள்ளதை அமல்படுத்த வேண்டும் சமூக நலன் மற்றும் வறுமை ஒழிப்பு திட்டங்களில் மற்றவர்களை விட 25 விழுக்காடு அளவு வழங்க வேண்டும் 100 நாள் வேலை திட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.