ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஆண் பிணம்
திண்டுக்கல் அருகே ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஆண் பிணம்;
திண்டுக்கல் முள்ளிப்பாடியை அடுத்த செட்டியபட்டி அருகே ரயில்வே தண்டவாள பகுதியில் திண்டுக்கல் வழியாக சென்ற ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஆண் பிணம். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.