திண்டுக்கல், திருச்சிரோடு வேல்வார்கோட்டை பிரிவு அருகே வேகமாக வந்த பால் வேனின் முன்பக்க டயர் வெடித்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்தவிபத்தில் அதிர்ஷ்டவசமாக பால்வேனில் வந்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினர். மேற்படி சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.