சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பைனான்சியர் போக்சோவில் கைது
திண்டுக்கல் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பைனான்சியர் போக்சோவில் கைது;
திண்டுக்கல் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமிக்கு திண்டுக்கல் சென்னம்மநாயக்கன்பட்டியை சேர்ந்த செல்வராஜ்(47) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர்கள் சாணார்பட்டி அனைத்து மகளிர் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முருகேஸ்வரி சார்பு ஆய்வாளர் முனியம்மாள் மற்றும் காவலர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட பைனான்சியர் செல்வராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.