சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை

தடை;

Update: 2025-07-19 08:15 GMT
தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுருளி அருவி சுற்றுலாத் தலமாகவும், ஆன்மீக தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த அருவியில் ஏராளமான பொதுமக்கள் குளித்துவிட்டு, சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து இரண்டு நாட்களாக பருவமழை கனமழையாக பெய்து வருகிறது. இதனால் சுருளி அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை, ஈத்தக்காடு , தூவானம் அணை பகுதியில் கனமழை பெய்து வனப்பகுதியில் உள்ள ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். மேலும் இன்று சனிக்கிழமை என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். அருவிப்பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நீர் வரத்து சீராகும் வரை வரவேண்டாம் என வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Similar News