அரசு தலைமை மருத்துவமனையில் பணி ஊக்குவிப்பு பயிலரங்கம்
மருத்துவமனையில் பாதுகாப்பு பணிகள் ஈடுபடும் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு என்னென்ன எப்படி என்று எடுத்துரைத்தால் மற்றும் மருத்துவமனைக்கு வரும் நபர்களிடம் எந்த முறையில் நடந்து கொள்ள வேண்டும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய முன்வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது;
அரசு தலைமை மருத்துவமனையில் பணி ஊக்குவிப்பு பயிலரங்கம் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் துப்புரவு மற்றும் காவல் பணியாளர்களுக்கு பணி ஊக்குவிப்பு பயிலரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு இணை இயக்குநர் மாரிமுத்து தலைமை வகித்து வரவேற்றார். மருத்துவ கண்காணிப்பாளர் கலா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தன்னம்பிக்கை பயிற்றுநர் செ.வைரமணி கலந்து கொண்டு உரையாற்றினார்.