ரவுடிகள் வீடுகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி அதிரடி சோதனையில்
திருட்டு, கொலை, கொள்ளை, சட்டவிரோத மது விற்பனை,கள்ளச்சாராயம், கஞ்சா,குட்கா,பான்மசாலா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை ஆகிவற்றை முற்றிலும் ஒழிக்கும் வகையில் மேற்படி குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை;
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று வழக்கமான குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் வீடுகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி அதிரடி சோதனையில் ஈடுபட்ட பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர். பெரம்பலூர் மாவட்டத்தில் திருட்டு, கொலை, கொள்ளை, சட்டவிரோத மது விற்பனை,கள்ளச்சாராயம், கஞ்சா,குட்கா,பான்மசாலா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை ஆகிவற்றை முற்றிலும் ஒழிக்கும் வகையில் மேற்படி குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா எடுத்து வருகின்றார்கள். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் குற்றம் நடவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா உத்தரவின்படி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபாலசந்திரன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு பெரம்பலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் A.ஆரோகியராஜ் பெரம்பலூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சதீஷ்குமார் ஆகியோர்கள், மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடும் வழக்கமான குற்றவாளிகள், ரவுடிகள், சந்தேக நபர்கள் ஆகியோரின் வீடுகளுக்கு சென்று இன்று 20.07.2025 -ம் தேதி அதிரடி சோதனை நடத்தினர். மேலும் மேற்படி குற்றப்பின்னனி உடைய நபர்களின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்தும், செயல்பாடுகளில் சந்தேகம் ஏதேனும் உள்ளவாறு நடந்து கொண்டுள்ளார்களா என்பதையும் தீவிரமாக விசாரணை செய்தனர். இந்த அதிரடி சோதனை குறித்து பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா இந்த சோதனையானது ரவுடிகள் மற்றும் வழக்கமான குற்றவாளிகள், சந்தேக நபர்கள் ஆகியோர்களின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ள செய்யும் வழக்கமான சோதனை தான் என்றும் குற்றம் நடவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த சோதனை நடைபெற்றது என்றும் கூறினார்கள்.