சிவகங்கை கோட்டாச்சியர் அலுவலகத்தில் சமாதான கூட்டம்
சிவகங்கை கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது;
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை வட்டம் பொய்யாமலிப்பட்டி, கொல்லம்பட்டி ஆக்கிரமிப்புகளை அகற்றாததை கண்டித்து சிவகங்கை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று சிவகங்கை கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்