செயற்கை கால்களை வழங்கிய சக்தி அம்மா!
ஸ்ரீ சக்தி அம்மா சாலை விபத்தில் தனது இரு கால்களையும் இழந்த பள்ளி மாணவர் தனுஷுக்கு செயற்கை கால்களை வழங்கினார்.;
வேலூர் மாவட்டம், அரியூரில் அமைந்துள்ள பொற்கோவில் ஸ்ரீ நாராயணி பீடம் மருத்துவ உதவித் திட்டத்தின் கீழ், இன்று ஸ்ரீ சக்தி அம்மா சாலை விபத்தில் தனது இரு கால்களையும் இழந்த சென்னையைச் சேர்ந்த பள்ளி மாணவர் தனுஷுக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள செயற்கை கால்களை வழங்கினார். அப்போது கோவில் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.