குழாய் உடைப்பால் வீணாகி வரும் குடிநீர்

கருவேப்பம்பூண்டியில் உடைப்பு ஏற்பட்டுள்ள குடிநீர் குழாயை சீரமைக்க, உத்திரமேரூர் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, அப்பகுதியில் வசிப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்;

Update: 2025-07-30 11:54 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், வெங்கச்சேரி செய்யாற்றில் இருந்து, ஆழ்துளை கிணறு அமைத்து, குழாய்கள் மூலமாக உத்திரமேரூர், திருப்புலிவனம், மருத்துவன்பாடி, கருவேப்பம்பூண்டி ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குழாய்கள் வெங்கச்சேரியில் இருந்து, உத்திரமேரூர் செல்லும் சாலையோரத்தில் பூமிக்கடியில் புதைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், உத்திரமேரூருக்கு குடிநீர் கொண்டு செல்லும் குழாயில், கருவேப்பம்பூண்டி பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து, ஒரு மாதமாக குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதியில், அப்பகுதியினர் குப்பை கழிவை கொட்டி வருகின்றனர். இந்த குப்பை கழிவில் உள்ள கிருமிகள் குடிநீரில் கலந்து, சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, கருவேப்பம்பூண்டியில் உடைப்பு ஏற்பட்டுள்ள குடிநீர் குழாயை சீரமைக்க, உத்திரமேரூர் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, அப்பகுதியில் வசிப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News