ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனை கூட்டம்
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனை கூட்டம்;
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றியதிற்கு உட்பட்ட வண்டலூர், ஊரப்பாக்கம், நெடுங்குன்றம், கீரப்பாக்கம் ஆகிய நான்கு ஊராட்சிகளில் இன்று மாலை ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்,மாவட்ட கழக செயலாளர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு உறுப்பினர் சேர்க்கையை விரைந்து முடித்திட ஆலோசனைகளை வழங்கினார் . இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் M.D. லோகநாதன்,காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன், துணைத்தலைவர் A.V.M. இளங்கோவன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள்,திமுக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.