வேலன்செட்யூரில் டூவீலர்கள் மோதல்- ஒருவர் படுகாயம்.

வேலன்செட்யூரில் டூவீலர்கள் மோதல்- ஒருவர் படுகாயம்.;

Update: 2025-07-31 10:45 GMT
வேலன்செட்யூரில் டூவீலர்கள் மோதல்- ஒருவர் படுகாயம். மதுரை மாவட்டம் , மேலூர் அருகே சாணிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தங்கபாண்டி வயது 35. இவர் ஜூலை 27ஆம் தேதி இரவு 11:45 மணியளவில் திண்டுக்கல் - கரூர் சாலையில் அவரது டூவீலரில் சென்றார். இவரது வாகனம் வேலஞ்செட்டியூர் தனியார் பெட்ரோல் பங்க் எதிரே வந்த போது, அதே சாலையில் பின்னால் வந்த கரூர் மாவட்டம் , அரவக்குறிச்சி, அஞ்சகவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் வயது 27 என்பவர் வேகமாக ஓட்டி வந்த மற்றொரு டூவீலர் , தங்கபாண்டி டூ வீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் டூவீலருடன் கீழே விழுந்ததில் தங்கபாண்டிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் அறிந்த தங்கபாண்டியன் சகோதரர் கார்மேகம் வயது 37 என்பவர் அளித்த புகாரில் , சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட அரவக்குறிச்சி காவல்துறையினர் டூவீல ரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பாலமுருகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News