காஞ்சிபுரத்தில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
உடைப்பை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது;
காஞ்சிபுரம் மாநகராட்சி, திருக்காலிமேடு பகுதியில் வசிப்போருக்கு, வேகவதி ஆற்றங்கரையில் ஆழ்துளை குழாய் அமைத்து, நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய்கள் மூலம், வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சின்ன வேப்பங்குளம் மேல்நிலை தொட்டி அருகில், நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த 15 நாட்களாக குடிநீர் வீணாகி வருகிறது. உடைப்பை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.