மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் ஜெயங்கொண்டம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி வெற்றி
மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் ஜெயங்கொண்டம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி வெற்றி பெற்றது.;
ஜெயங்கொண்டம் ஆக.1- அரியலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி ஜெயங்கொண்டம், மாடர்ன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. 29ம் தேதி முதல் நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு நிலைகளில் நடைபெற்றுது. இப் போட்டிகளில் 11 அணிகள் கலந்து கொண்டன. இறுதிப்போட்டியில் ஜெயங்கொண்டம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி வெற்றி பெற்று பரிசுக் கோப்பையை வென்றது. போட்டியில் வெற்றிபெற்று கோப்பையை வென்ற மாணவர்களை கல்லூரி முதல்வர்(மு.கூ.பொ) முனைவர் இராசமூர்த்தி , முன்னாள் முதல்வர் முனைவர் இரமேஷ் , உடற்கல்வி இயக்குநர் முனைவர் அன்பரசன் மற்றும் அனைத்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.