கோவை: அன்புநகர் சாலை சேதம்: பொதுமக்கள் சீரமைப்பு கோரிக்கை
அன்புநகரில் மழையால் சாலையில் சேறும், சகதியும் தேங்கி பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.;
கவுண்டம்பாளையம் அருகேயுள்ள அன்பு நகரில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால், சாலையில் மழைநீருடன் சாக்கடை கழிவுநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதனால் நடக்கும் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். சாலையை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.