பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும் அரசாக உள்ளது தமிழக அரசு. எம்எல்ஏ இளங்கோ விளக்கம்.

பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும் அரசாக உள்ளது தமிழக அரசு. எம்எல்ஏ இளங்கோ விளக்கம்.;

Update: 2025-08-06 09:11 GMT
பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும் அரசாக உள்ளது தமிழக அரசு. எம்எல்ஏ இளங்கோ விளக்கம். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காருடையாம்பாளையம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட நிகழ்ச்சி புகலூர் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கார்த்தி உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள்,15 துறைகளைச் சார்ந்த அரசு துறை அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளராக அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்து ,தேர்வு செய்த பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்த அவர்,நிகழ்ச்சியின் நிறைவில் சிறப்புரையாற்றினார். அப்போது பொதுமக்களுக்கு தேவையான அடிப்பதை வசதிகளான குடிநீர் , சாலை வசதி , சுகாதாரம் போன்ற பல்வேறு துறைகள் சார்ந்த குறைகளை தீர்த்து வைப்பதற்காகவே இந்த அரசு தீவிரமாக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

Similar News