போக்சோ வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டாஸ பாய்ந்தது
போக்சோ வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!;
தூத்துக்குடியில் போக்சோ வழக்கில் கைதான வாலிபரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் சிறையில் அடைத்தனர். தூத்துக்குடியில்கடந்த 07.07.2025 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி மடத்தூரைச் சேர்ந்த லிங்கசெல்வன் மகன் அஸ்வின் ஜெயக்குமார் (21) என்பவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் கே. இளம்பகவத் உத்தரவின் பேரில் இன்று சிப்காட் காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.