சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் வாலிபர் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் வாலிபர் கைது;
கோவில்பட்டி அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே தெற்குத் திட்டங்குளம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் கார்த்தீஸ்வரன் (19). இவர் 13 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கார்த்தீஸ்வரனை கைது செய்தனர்.