குமரி மாவட்டம் குருந்தன்கோடு கிழக்கு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் குருந்தன்கோடு சந்திப்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிழக்கு வட்டாரத் தலைவர் பொன். பால் துரை தலைமை தாங்கினார், சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு பேசியதாவது ; தேர்தல் ஆணையம் போட்டோவை பயன்படுத்தி போலி பெயர்களில் வாக்காளர் அடையாள அட்டைகளை உருவாக்கி உள்ளனர். அதேபோல பல இடங்களில் வாக்காளர்களை சேர்த்தும், நீக்கியம் உள்ளனர். இப்படி நிறைய விஷயங்கள் நடந்துள்ளது. இதற்கான தெளிவான விளக்கம் வேண்டுமென ராகுல் காந்தி அவர்கள் தேர்தல் கமிஷனிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு தேர்தல் கமிஷன் மற்றும் பாஜக-வினர், கண்டுகொள்ளாமல் தட்டிக் கழிக்கின்றனர். அவர்கள் ராகுல் காந்தி அவர்கள் பொய் கூறுகிறார்கள் எனவும் பேசி வருகின்றனர். பீகாரை சேர்ந்த ஆறு லட்சம் பேரை தமிழகத்தில் வாக்காளர்களாக சேர்த்துள்ளனர். அதேபோல 15 லட்சம் பேரை அவர்கள் சேர்க்கும் போது நிலைமை என்ன ஆகும், தமிழகத்தில் இவ்வாறு வாக்காளர்களை சேர்க்கும் போது யார் ஆட்சி அமைக்க வேண்டும் என நாம் தான் முடிவு செய்ய வேண்டும். வெளி மாநிலங்களில் இருந்து வருகின்றவர்கள் முடிவு செய்யக்கூடாது. தமிழக அரசு இன்று பெண்களுக்கு உரிமை தொகை, பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை, மகளீர் இலவச பேருந்து பயணம் என்ன பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. எனவே இந்த நல்லாட்சி தொடர நாம் உறுதுணையாக இருப்போம் எல்லோரும் இணைந்து செயல்படுவோம் இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், மாநில பேச்சாளர்கள் குமரி மகாதேவன், அந்தோணி முத்து ,கிழக்கு மாவட்ட தலைவர் கே டி உதயம், அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் ஆண்டனி விஜிலியஸ் உட்பட பேரூராட்சி, ஊராட்சி காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .