கல்லூரியில் விழிப்புணர்வு ஊர்வலம்!
கே.வி.குப்பம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், போதை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.;
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், போதை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. அரசு மேல்நிலைப்பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் நந்தகோபால் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.இதில், கல்லூரி மாணவர்கள் போதை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி சென்றனர். இதில், கல்லூரி முதல்வர் பீதாம்பர பிரபுகாந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.