காட்டுமன்னார்கோவில் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை
காட்டுமன்னார்கோவில் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.;
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் துணை மின் நிலையத்தில் இன்று (ஆகஸ்ட் 19) பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும். இதனால் காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, பழஞ்சநல்லூர், கண்டமங்களம், மோவூர், வீரானந்தபுரம், நாட்டார்மங்களம், கஞ்சன்கொள்ளை, முட்டம், விலாகம், டி. நெடுஞ்சேரி, விருத்தாங்கநல்லூர், பெருங்காளுர், குமராட்சி, பருத்திக்குடி, வெள்ளூர், வெண்ணையூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படும்.