அரியலூரில் விபத்து நடக்கும் பகுதிகளில், ஆட்சியர், எஸ்.பி ஆய்வு

அரியலூரில் விபத்து நடக்கும் பகுதிகளில், மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி ஆய்வு செய்தனர்;

Update: 2025-08-19 10:42 GMT
அரியலூர், ஆக.19- அரியலூர் மாவட்டத்தில் அதிகளவில் விபத்து நடக்கும் பகுதிகளில், ஆட்சியர் பொ.ரத்தினசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி ஆகியோர்  ஆய்வு செய்தனர். . தமிழக அரசின் “விபத்தில்லா தமிழ்நாடு” என்ற தொலைநோக்கு பார்வையை நினைவாக்கும் வகையில் தமிழகம் முழுவதும் அதிக சாலை விபத்துகள் நடைபெறும் 100 சாலைகள் கண்டறியப்பட்டுள்ளன. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் என்.எச்}82, 136 மற்றும் எஸ்.எச்}140 ஆகிய சாலைகள் அதிக விபத்துகள் நடைபெறும் சாலையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.இதையடுத்து, என்.எச் 81, எஸ்.ஏ 136, என்.எச் 140, ஆகிய சாலைகள் இணையும் பகுதியான கீழப்பழுவூர்,  சுண்டக்குடி பிரிவு,  பொய்யூர் மற்றும் மணகெதி அடுத்த பொட்டக்கொல்லை ஆகிய பகுதிகளில் ஆட்சியர் பொ.ரத்தினசாமி,  மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்த்ரி ஆகியோர் கள ஆய்வு செய்து,சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம், இப்பகுதிகளில் விபத்துகள் நடைபெறா வண்ணம் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.இந்த ஆய்வின் போது, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்ச்செல்வன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், வட்டாரப் போக்குவரத்து அலுவலர், அரியலூர்,ஜெயங்கொண்டம் போக்குவரத்து ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Similar News