அரியலூரில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அரியலூரில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் முகமூடி அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
அரியலூர், ஆக.19- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகம் முன் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் முகமூடி அணிந்து மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி, சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்கிட வேண்டும். உயிர் நீத்த சாலைப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கிட வேண்டும் .மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைத்திட வேண்டும். தனியர்மயமாக்கலை கைவிட வேண்ம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.பைரவன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஏ.எஸ்.ஆர்.அம்பேத்கர், கோரிக்கை விளக்கவுரையாற்றினார். சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.