அரக்கோணத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு
எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு;
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற தலைப்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி அதிமுகவினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் சு. ரவி தலைமையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பொதுமக்கள் மத்தியில் பழனிச்சாமி சிறப்புரையாற்றினார்.