டிஎம்பி அறக்கட்டளை சார்பில் கல்விக் கண்காட்சி தொடக்கம்
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் டிஎம்பி அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கண்காட்சி தொடங்கியது.;
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் டிஎம்பி அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கண்காட்சி தொடங்கியது. தூத்துக்குடியில் காமராஜ் (தன்னாட்சி) கல்லூரியும், டிஎம்பி அறக்கட்டளையும் இணைந்து, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவர்களுக்காக நடத்தும் இரு நாள்கள் கல்விக் கண்காட்சி, கல்லூரி வளாகத்தில் நேற்று தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் பானுமதி தலைமை வகித்தார். டி.எம்.பி. அறக்கட்டளையின் நிர்வாக அதிகாரி சி.கே.ஜெய்சங்கர் கல்விக் கண்காட்சியை தொடங்கிவைத்தார். முதல் நாளில் 20 பள்ளிகளிலிருந்து சுமார் 2,000 மாணவர்கள் கலந்துகொண்டு கண்காட்சியைப் பார்வையிட்டனர். இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை மேலும் 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காமராஜ் கல்லூரி மாணவர்களால் ஆண்டு தோறும் நடத்தப்படும் இக்கண்காட்சியில், கலை மற்றும் அறிவியல் துறைகளில் இருந்து பல்வேறு மாதிரி வடிவங்கள், செய்முறைகள் பள்ளி மாணவர்களை கவரும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் சுற்றுவட்டாரப் பகுதி பள்ளி, மாணவர், மாணவிகள் திரளாக வந்து பார்வையிட்டு வருகின்றனர்.