குமரி மாவட்டம் குன்னத்தூர் மாத்திவிளையை சேர்ந்தவர் நாகராஜா மகன் கோகுல் குமார் (28). இவர் சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் கோகுல்குமார் சம்பவ தினம் மாலை 7 மணி அளவில் கழுத்தில் ஒரு சேலையுடன் அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்து உள்ளார். ஆனால் அதன் பின்னர் இவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. பின்னர் இவரை தந்தை நாகராஜா உள்ளிட்ட உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது இவரது வீட்டில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் காட்டுவிளை என்ற பகுதியில் உள்ள ஒரு மரத்தில் சேலையால் தூக்கு போட்டு இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இது குறித்து புதுக்கடை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் கோகுல் குமார் உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீஸ் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.