பாரதியார் நினைவு தினம், மாலை அணிவித்து மரியாதை 

பாரதி;

Update: 2025-09-12 14:21 GMT
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது சிலைக்கு பல்வேறு பாரதி அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  பாரதியாரின் 104 ஆவது நினைவு தினத்தையொட்டி புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பாரதியார்  சிலைக்கு பாரதி கலை இலக்கியப் பேரவை தலைவர் கல்வியாளர் கே.வி.கிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பாரதியாரின் புரட்சிகரக் கருத்துக்களை பொதுமக்களிடம் கொண்டு செல்ல உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.  இதே போல், பாரதி இலக்கிய பேரவை சார்பில் அதன் தலைவர் புலவர் போசு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பாரதி அன்பர்கள் இலக்கிய மன்றம் சார்பில், அதன் தலைவர் பாரதி வை.நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  நிகழ்ச்சியில், பாரதி கலை இலக்கிய பேரவை செயலாளர் பொன்.நடராஜன், பொருளாளர் சேகர், ஒருங்கிணைப்பாளர் ராமு, ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் தங்கசாமி, செயற்குழு உறுப்பினர் பெத்தையன், பாரதி அன்பர்கள் இலக்கிய மன்ற செயலாளர் மூர்த்தி, பொருளாளர் சையது முகமது கனி, நிர்வாகிகள் கதிர்காமம், நீலகண்டன், செல்வி, வீரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News