வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளை
மதுரை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளை போன சம்பவம் நடந்துள்ளது;
மதுரை அருகே வேடர்புளியங்குளத்தை சேர்ந்த சரவணனின் (44) என்ற கட்டட தொழிலாளியின் மாமனார் ராமநாதபுரத்தில் இறந்ததால் கடந்த ஆக.31ல் சரவணன் குடும்பத்துடன் அங்கு சென்று விட்டு நேற்று முன்தினம் (செப் .11) வீடுதிரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ. 1. 50 லட்சம் மதிப்பிலான நகைகள் திருடு போனது தெரிந்தது. இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.