சங்கரன்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் இன்று கனமழை
சுற்று வட்டார பகுதிகளில் இன்று கனமழை;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளான புளியம்பட்டி, கரிவலம்வந்தநல்லூர், களப்பகுளம், அழகாபுரி, இருமன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் இன்று மதியம் குளிர்ந்த காற்று வீசியதால் கொட்டி தீர்த்தது கனமழை பெய்தது. இதனால் சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் மக்காச்சோளம், பருத்தி, உளுந்து, பாசி உள்ளிட்டவைகளை விவசாயம் நடும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் கன மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.