ஆற்றிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப் பணி, ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை.

ஆற்றின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே செங்கம் பகுதி விவசாயிகள், பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.;

Update: 2025-09-19 17:02 GMT
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் பாயும் செய்யாற்றின் இரு கரைப் பகுதிகளிலும் விவசாயிகள் ஆக்கிரமித்து விவசாய நிலங்களாக மாற்றியுள்ளதால், இந்தப் பகுதியில் இந்த செய்யாறு ஓடைபோல மாறியுள்ளது. எனவே, ஆற்றிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப் பணி, ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. செங்கம் அருகே உள்ள ஜவ்வாதுமலை அடிவாவாரமான ஊா்கவுண்டனூா், பண்ரேவ், கிளையூா், கல்லாத்தூா் பகுதிகளில் சிறு, சிறு ஓடைகள் ஓன்றிணைந்து செங்கம் பகுதி வழியாக செய்யாறு பாய்கிறது. இந்த ஆறு காஞ்சி, கலசப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று பாலாற்றில் கலக்கிறது. இந்தப் பகுதிகளில் செய்யாறு ஓடைபோல குறுகி காணப்படுகிறது. பலத்த மழைக்காலங்களில் குப்பணத்தம் அணை நிரம்பி தண்ணீா் திறக்கப்படும்போது, ஆக்கிரமிப்பு காரணமாக செய்யாற்றில் கரைபுரண்டு வரும் வெள்ளநீா் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிா்களை மூழ்கடித்து பலத்த சேதத்தை ஏற்படுத்துகிறது. எனவே, செங்கம் பொதுப் பணி, ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் குப்பணத்தம் முதல் செங்கம் எல்லை முடிவு வரை செங்கம் பகுதியில் பாயும் செய்யாற்றை பாா்வையிட்டு, ஆற்றின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே செங்கம் பகுதி விவசாயிகள், பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Similar News