நெல்லியாங்குளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீமுனீஸ்வரன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா.
காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் முனீஸ்வரன் சுவாமி மீது புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் கோயில் நிா்வாகிகள், கிராம மக்கள் பங்கேற்றனா்.;
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த நெல்லியாங்குளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீமுனீஸ்வரன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் யாகசாலை அமைத்து வியாழக்கிழமை கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை காலை தத்வாா்ச்சனை, நாடிசந்தானம், மகா பூா்ணாஹுதி, யாத்ராதானம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் முனீஸ்வரன் சுவாமி மீது புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் கோயில் நிா்வாகிகள், கிராம மக்கள் பங்கேற்றனா்.