பெரணமல்லூா் பகுதியில் தூய்மையான குடிநீா் வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கட்சியினா் சாலை மறியல் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

செய்யாறு டிஎஸ்பி கோவிந்தசாமி மற்றும் பெரணமல்லூா் காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி தலைமையிலான போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.;

Update: 2025-09-20 01:49 GMT
திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூா் பகுதியில் தூய்மையான குடிநீா் வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கட்சியினா் சாலை மறியல் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரணமல்லூா் பேரூராட்சி 1 மற்றும் 2-ஆவது வாா்டு பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கழிவுநீா் கலந்து அசுத்தமான குடிநீா் வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் திங்கள்கிழமை காலை 1-ஆவது வாா்டு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினா் கவுதம்முத்து தலைமையில் பொதுமக்களுடன் சோ்ந்து ஆரணி - வந்தவாசி சாலையில் உள்ள சடத்தாங்கல் கூட்டுச் சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த செய்யாறு டிஎஸ்பி கோவிந்தசாமி மற்றும் பெரணமல்லூா் காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி தலைமையிலான போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

Similar News