கொல்லங்கோடு பகுதி கோனசேரியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (46). வெல்டிங் தொழிலாளி. இவருக்கு மனைவி, இரண்டு பிள்ளைகள் உண்டு. கடந்த ஒரு ஆண்டாக மனைவி இவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இதனால் மணமுடைந்த கிருஷ்ணமூர்த்தி நேற்று அவர் வீட்டின் சமையலறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கொல்லங்கோடு போலீசார் பிணத்தை கைப்பற்றி குழித்றுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.