தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை!
தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை!;
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 272 விசைப் படகுகளில் சுழற்சி முறையில் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக மீன்பாடு அதிகமாக இல்லாததால் நஷ்டம் ஏற்பட்டு வருவதாக விசைப்படகு உரிமையாளர்கள் தெரிவித்து வந்தனர். டீசல், மீனவர்கள் சம்பளம கொடுக்க முடியாமல் திணறி வந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் கடலில் 50 முதல் 55கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக செப்.25 மற்றும் 26 ஆம் தேதி ஆகிய 2 நாட்கள் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 272 விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சுமார் 5ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.