இலுப்பூர் அருகே பாம்பு கடித்து இளைஞர் உயிரிழப்பு

விபத்து செய்திகள்;

Update: 2025-10-05 11:34 GMT
இலுப்பூர் அடுத்த கீழ சித்தகுடிப்பட்டியை சேர்ந்தவர் வீரமூர்த்தி(25). இவர் விராலிமலையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த அக்.2ம் தேதி வேலை செய்து கொண்டிருந்தபோது, அவரைப் பாம்பு கடித்தது. பின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின்படி இலுப்பூர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Similar News