காட்டுக்கூடலூர்: ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு
காட்டுக்கூடலூர் பகுதியில் ஊராட்சி மன்ற அலுவலகம் திறக்கப்பட்டது.;
கடலூர் மாவட்டம் காட்டுக்கூடலூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், ரூ.28.10 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. இதனை நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் திறந்து வைத்தார். உடன் அரசு அலுவலர்கல் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.